ADDED : ஜன 30, 2024 11:48 PM

சிவகங்கை : தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மகாத்மா காந்தி படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர், டாக்டர்கள், மற்றும் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கமலவாசன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கவிதாராணி, விஜயசந்திரன் கலந்துகொண்டனர்.