ADDED : ஜன 11, 2024 04:19 AM
காரைக்குடி : கல்லல் அருகே உள்ள புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி 64. இவர் மாடுகள் வைத்துஉள்ளார்.
இவரது வீட்டின் அருகே சரக்கு வாகனத்தில் வந்த மூன்று பேர் பாண்டியின் காளை மாட்டை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள், அம்மூவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் குரும்பபட்டிகளம் பழனிவேல் மகன் கோபிநாத் 24, கரந்தப்பட்டி முருகேசன் மகன் உதயகுமார் 23, இலுப்பூர் ராமலிங்கம் மகன் ஹரிஹரன் 21 என தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைதுசெய்தனர்.