ADDED : ஜூன் 21, 2024 04:26 AM
பழையனுார்: பழையனுார் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 முடித்து விட்டு மதுரை கல்லூரியில் இந்தாண்டு முதல் வருட படிப்பில் சேர்ந்துள்ளார்.
15 வருடங்களுக்கு முன் தந்தை உயிரிழந்ததால் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். உடல் நிலை சரியின்றி இருந்ததால் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.