Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அஞ்சலகங்களில் விவசாயிகள் உதவித்தொகை

அஞ்சலகங்களில் விவசாயிகள் உதவித்தொகை

அஞ்சலகங்களில் விவசாயிகள் உதவித்தொகை

அஞ்சலகங்களில் விவசாயிகள் உதவித்தொகை

ADDED : ஜூன் 16, 2024 04:52 AM


Google News
காரைக்குடி:அஞ்சலகங்களில் விவசாயிகளுக்கான ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான முகாம் ஜூன் 18ம் தேதி நடக்கிறது.

காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் கூறியதாவது:

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ள 17வது தவணையான ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் வசதியை பயன்படுத்தி கட்டணமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் தபால் காரர்கள் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலம் கட்டணமின்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஜூன் 30-ம் தேதி வரை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பயனாளிகள் முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட பயனாளிகள் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் தங்களது வங்கி கணக்கில் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us