/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜூன் 23, 2024 03:53 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
கானாடுகாத்தான் தேத்தாம்பட்டி பரமனுார் காளியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 33 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு 26, சிறிய மாடு 7 என இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது.
பெரிய மாட்டிற்கு 8 கி.மீ.,துாரமும் சிறிய மாட்டிற்கு 6 கி.மீ., துாரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.