ADDED : ஜூலை 05, 2024 04:45 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ.
பள்ளி மாணவர்கள் காரைக்குடியில் புகையிலை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். காரைக்குடி டி.எஸ்.பி.,பிரகாஷ், தாளாளர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஊர்வலத்தை துவக்கினர். தாளாளர் விவியன் ஜெய்சன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி. பிரகாஷ் புகையிலை, போதை பொருள் குறித்து உரையாற்றினார். போக்குவரத்து ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், ரவீந்திரன் பங்கேற்றனர்.