Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

ADDED : ஜூலை 03, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை:சிவகங்கை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற கண்ணன் 34. இவர் அதே பகுதியில் சலுான் கடை நடத்தி வருகிறார்.

2019 ஜூன் 27ல் கடைக்கு சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தந்தையுடன் முடி வெட்ட வந்தார். சிறுமி தந்தை இல்லாத நேரம் முத்துக்குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

முத்துக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us