/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அண்ணன், தம்பி கொலையில்பெண் உட்பட 7 பேர் கைது அண்ணன், தம்பி கொலையில்பெண் உட்பட 7 பேர் கைது
அண்ணன், தம்பி கொலையில்பெண் உட்பட 7 பேர் கைது
அண்ணன், தம்பி கொலையில்பெண் உட்பட 7 பேர் கைது
அண்ணன், தம்பி கொலையில்பெண் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜூலை 03, 2024 02:23 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் நடந்த அண்ணன், தம்பி கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட7பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா 24, சுபாஷ் 23. இவர்களின் நண்பர்களான சிவகங்கை அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷ் 19, சாத்தரசன்பட்டி நவீன் 19, கிளுவச்சி அஜய் 20, ஆகியோருடன் இணைந்து கொல்லங்குடி அருகே கல்லணையில் தங்கி மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்தனர்.
இவர்கள் கடந்த வாரம் பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகளை அவிழ்த்து விட்டனர். காளைகளை பிடிப்பது தொடர்பாக புதுப்பட்டியைச் சேர்ந்த சக்தி மகன் மதன் 20, மற்றும் அவரது நண்பர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்நிலையில் ஜூன் 30 இரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் கொண்ட கும்பல் கல்லணையில் துாங்கிய ஜெயசூர்யா, சுபாைஷ தாக்கி கொலை செய்தனர். ஜெயசூர்யா நண்பர்கள் ராஜேஷ் மற்றும் நவீன் காளையார்கோவில் போலீசாருக்கு இதுகுறித்து தெரிவித்தனர்.
சிவகங்கை செல்லச்சாமி மகன் திவாகர் 23, சுந்தர நடப்பு முத்துக்குமார் மகன் சந்தோஷ் 23, நகரம்பட்டி தியாகராஜன் மகன் ராம்ஜி 21, சண்முகராஜா மகன் யுவராஜ் 22, ஒக்கூர் பாண்டி மகன் அபினேஷ் 22, மதகுபட்டி மாணிக்கம் மகன் அருண்குமார் 30, சிவகங்கை வாணி கருப்பு மனைவி மதுமதி 26. ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி மதன் தலைமறைவாக உள்ளார்.