ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையை சேர்ந்தவர் சுப்ர-மணி, 53.
கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 7ல் தலைவா-சலில் இருந்து, 'பஜாஜ்' பைக்கில் வீரகனுார் நோக்கி வந்துகொண்-டிருந்தார். வீ.ராமநாதபுரத்தில் வந்தபோது, முன்புறம் சென்ற பைக் மீது சுப்ரமணி ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் படு-காயம் அடைந்த சுப்ரமணி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.