Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

ADDED : ஜூலை 28, 2024 03:40 AM


Google News
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையை சேர்ந்தவர் பச்சமுத்து, 50. பா.ம.க.,வில் சேலம் மாவட்ட பசுமை தாயக செயலராக உள்ளார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, 'கியா' காரில் சின்னப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதேநேரம் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த சுகவனேஷ்-வரன், 24, மினி சரக்கு ஆட்டோவில், கட்டட பயன்பாட்டுக்கு-ரிய இரும்பு ராடுகளை ஏற்றி ஓட்டி வந்துகொண்டிருந்தார். இவர், பச்சமுத்து காரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.

இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை, கறிக்கடை திட்டு பகுதியில் ஆட்டோவில் பிரேக் போட்டார். அப்போது அதில் இருந்த இரும்பு ராடுகள், பச்சமுத்து காரின் பின்புற கண்-ணாடியை உடைத்து உள்ளே சென்றது. பின்சீட்டில் யாரும் இல்-லாததால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பச்சமுத்துவும் அதிர்ஷ்ட-வசமாக உயிர்தப்பினார். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகுடஞ்சாவடி போலீசார் விசா-ரிக்கின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us