/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு
பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு
பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு
பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு
ADDED : ஜூன் 28, 2025 04:03 AM
சேலம்: ''பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்-கப்பட்டுள்ளது,'' என, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:
தெய்வலிங்கம்(9வது வார்டு): மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, இடையில் நிறுத்தப்-பட்டதால்
கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. இதனால் உரிய நடவ-டிக்கை எடுக்க
வேண்டும்.
கோபால்(58வது வார்டு): அம்பாள் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் விஷமாக மாறி வருகி-றது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மூணாங்க-ரடு உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் மலை மேல் உள்-ளன. அவர்களிடம், பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கப்படுகி-றது. அங்கு சாக்கடை வசதி கூட இல்லை. இதனால் அவர்க-ளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.
ராஜ்குமார்(13வது வார்டு): அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன் ஏராளமான கடைகள் உருவாகிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகள் அவதிக்கு ஆளாகின்-றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.
பழனிசாமி(51வது வார்டு): சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகு-தியில் தினமும், 10,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்-கின்றனர். அங்கு கழிப்பறை, நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
மேயர் ராமச்சந்திரன்: பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களிலும் உள்ள, 119 திறந்தவெளி கிணறுகளை புனரமைக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினர்.
கடந்த, 15 ஆண்டுக-ளாக வறண்டுள்ள ஏரியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. தற்போது நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரியின் ஒரு பகுதி, புதுப்பொலிவு பெற வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.