/உள்ளூர் செய்திகள்/சேலம்/காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைகாமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
சேலம்: காமராஜர் பிறந்தநாள் விழா, நேற்று சேலத்தில் அரசியல் கட்சி-யினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
ஆனந்தா பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்., சார்பில் மாநகர தலைவர் பாஸ்கர் தலை-மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநகர பொருளாளர் ராஜகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* பா.ம.க., சார்பில் எம்.எல்.ஏ. அருள், மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கதிர் ஆனந்தன், மாவட்ட அமைப்பு செயலர் குமார், துணை செயலர் ராஜமா-ணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். த.மா.கா., சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் உலக நம்பி, காம-ராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழக வெற்றி கழகம் சார்பில், சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் மாலை அணி-வித்தார்.