Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா

சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா

சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா

சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா

ADDED : ஜூலை 16, 2024 02:03 AM


Google News
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 2019ல், 108 திவ்யதேச பெருமாள்களை தத்ரூபமாக சுதை சிற்பங்-களாக வடித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.

இதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று காலை கணபதி யாகத்துடன் துவங்கியது. தொடர்ந்து கலசங்கள் வைத்து கும்பாபிேஷக நிறைவு விழா, 108 மூலிகைகளை கொண்டு யாகம் நடத்தப்பட்-டது. மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மலர்மா-லைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டது.ஆண்டு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us