ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் மூர்த்தி, 37.
லாரி உரிமையாளரான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சாலையோர புளிய மரத்தின் கீழ் நின்றிருந்தார். அப்போது பாம்பு தீண்டி மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர், அவரை, தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.