Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் -உலக சுற்றுச்சூழல் தின விழா

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் -உலக சுற்றுச்சூழல் தின விழா

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் -உலக சுற்றுச்சூழல் தின விழா

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் -உலக சுற்றுச்சூழல் தின விழா

ADDED : ஜூன் 09, 2024 04:09 AM


Google News
சேலம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் முனைவர். கார்த்திகேயன், சுற்றுச்சூழல் பேணி காப்பதன் இன்றியமையாமை பற்றியும், மாணவர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் தங்களின் வீடுகளில் மரங்களை நடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், 150 மரக்கன்றுகள் கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டது. ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தலா ஒரு மரக்கன்று பராமரிப்பு செய்ய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி

திட்டஅலுவலர், தேசிய மாணவர் படை அலுவலர், மாணவ, மாணவிகள்,

அலுவலர்கள், தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us