Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்

சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்

சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்

சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்

ADDED : ஜூலை 18, 2024 02:13 AM


Google News
ஓமலுார்: சிறுத்தை தாக்கி உயிரிழந்த பசுமாட்டுக்கு, இழப்பீடு வழங்கு-வதில் வனத்துறையினர் காலதாமதம் செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட, எலத்துார் காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டுபி-டிக்கப்பட்டது. கடந்த ஜூன், 3ல், காருவள்ளி கிராமத்துக்குட்-பட்ட கோம்பைக்காடு பகுதியில் சீனிவாசன், 65, என்பவரின் பசு-மாட்டை, சிறுத்தை வேட்டையாடி கொன்றது. அவ்விடத்-தையும், பசுமாட்டையும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட பின், இழப்பீடு வழங்கப்படும் என கூறினர்.

சிறுத்தையால் கொல்லப்பட்டு, ஒன்றரை மாதத்துக்கு மேலா-கியும், வனத்துறையினர் பசுமாட்டுக்கு இழப்பீடு வழங்க-வில்லை. நேற்று பாதிக்கப்பட்ட விவசாயி சீனிவாசன் கூறு-கையில்,'' டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, இழப்பீடு வழங்க கோரி கடிதம் வழங்கினேன். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது முறை-யான பதில் தரவில்லை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us