/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம் சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்
சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்
சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்
சிறுத்தை தாக்கி பலியான பசுமாடு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம்
ADDED : ஜூலை 18, 2024 02:13 AM
ஓமலுார்: சிறுத்தை தாக்கி உயிரிழந்த பசுமாட்டுக்கு, இழப்பீடு வழங்கு-வதில் வனத்துறையினர் காலதாமதம் செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட, எலத்துார் காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டுபி-டிக்கப்பட்டது. கடந்த ஜூன், 3ல், காருவள்ளி கிராமத்துக்குட்-பட்ட கோம்பைக்காடு பகுதியில் சீனிவாசன், 65, என்பவரின் பசு-மாட்டை, சிறுத்தை வேட்டையாடி கொன்றது. அவ்விடத்-தையும், பசுமாட்டையும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட பின், இழப்பீடு வழங்கப்படும் என கூறினர்.
சிறுத்தையால் கொல்லப்பட்டு, ஒன்றரை மாதத்துக்கு மேலா-கியும், வனத்துறையினர் பசுமாட்டுக்கு இழப்பீடு வழங்க-வில்லை. நேற்று பாதிக்கப்பட்ட விவசாயி சீனிவாசன் கூறு-கையில்,'' டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, இழப்பீடு வழங்க கோரி கடிதம் வழங்கினேன். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது முறை-யான பதில் தரவில்லை,'' என்றார்.