/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 68,843 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 71,777 கன அடி; மாலையில், 57,409 கனஅடியாக சரிந்தது. நீர்மட்டம், 70.80 அடி; நீர் இருப்பு, 33.39 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.
டெல்டா பாசன நீர் திறப்பு?
திருச்சி, தஞ்சாவூர் உள்பட, 13 டெல்டா மாவட்டங்களில், 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை, 17.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். குறுவைக்கு ஜூன், 12ல் நீர் திறக்க மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல், நீர் இருப்பு, 52 டி.எம்.சி., இருக்க வேண்டும்.
விசைப்படகு இயக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, காவிரி கரையோரத்தில் பண்ணவாடி, கோட்டையூர் செட்டிப்பட்டியில் இருந்து மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமறை, ஒட்டனுார், ஏமனுாருக்கு பயணியர் விசைப்படகு, பரிசல் இயக்கப்படுகின்றன. கர்நாடகாவின் கபினியில் திறக்கப்பட்ட உபரிநீர் வந்ததால், கடந்த, 17ல், மேட்டூர் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.