Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 28, 2024 03:42 AM


Google News
சேலம்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த, பா.ஜ., அரசை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. அதற்கு தலைமை வகித்து, சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதாவது:

நாம், 6 லட்சம் கோடி ரூபாயை வரியாக கொடுக்கும் நிலையில், மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாயை மட்டும் திருப்பி கொடுக்கிறது. வெள்ள நிவாரணத்துக்கு, 37,000 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும், 200 கோடி தான் கொடுத்தார்கள். ஆட்-சியை காப்பாற்றிக்கொள்ள ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அதிக நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணிப்பதால், 8 கோடி மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்-வாறு அவர் பேசினார். முன்னிலை வகித்து, எம்.எல்.ஏ., ராஜேந்-திரன் பேசுகையில், ''மத்திய பட்ஜெட் மூலம் மாபெரும் துரோ-கத்தை மோடி, தமிழகத்துக்கு செய்திருக்கிறார்.

நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து மாநிலத்துக்கும் சமமான-தாகவும், வரிச்சலுகையும் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்-துக்கு நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்-திய அரசு நடந்து கொள்கிறது,'' என்றார்.

முன்னிலை வகித்து, கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசு-கையில், ''மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த நிர்-மலா சீதாராமன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம்,'' என்றார்.

முன்னதாக மத்திய அரசை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர்கள் கார்த்திகேயன், ஸ்ரீராம், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us