/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
ADDED : ஜூலை 17, 2024 09:01 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டு கல்வி கடன் வழங்குவது குறித்து, ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க, மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கற்க பொருளா-தாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்-டத்தில், 160 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் உள்ளன. கடந்த ஆண்டு, 5,773 மாணவ, மாணவி-யருக்கு, 89.01 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 7,000 பேருக்கு, 99 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிய காரணமின்றி கல்வி கடன் விண்ணப்-பங்களை நிராகரிக்கக்கூடாது என, வங்கி அலு-வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கல்வி கடன் மேளா நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், அனைத்து வங்கி கிளை மேலா-ளர்கள், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் பங்-கேற்றனர்.