Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

ADDED : மே 20, 2025 09:55 PM


Google News
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்யதேங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்தாண்டு மார்ச்சில், இந்த மலைக்கோவிலக்கு ரோப்கார் சேவை துவக்கப்பட்டது. காலை 9:00 - மாலை 5:00 மணி வரை ரோப்கார் சேவை இயங்குகிறது. மலைக்கோவிலுக்கு சென்றுவர தலா, 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமான பக்தர்கள் ரோப்காரில் பயணித்து சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். நேற்று காலை 8:00 மணி முதல் வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு ரோப்காரில் பயணித்தனர்.

மதியம் 2:00 மணியளவில் திடீரென கனமழை பெய்ய துவங்கியதால், ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து பக்தர்கள், படி வழியாக அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us