Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்

லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்

லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்

லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்

ADDED : மே 19, 2025 02:36 AM


Google News
அரக்கோணம்: அரக்கோணத்தில் மாமூல் கேட்டு, லாட்ஜிற்குள் புகுந்து தி.மு.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை, கத்தியால் வெட்டிய கும்-பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, 36; இவரின் தந்தை மணி, 60; இவர்களுக்கு சொந்தமான லாட்ஜ், அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ளது. பைனான்ஸ் தொழிலும் செய்கின்-றனர். லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு, பாபு, லாட்ஜ் மேனேஜர் சுரேஷ், 37, மற்றும் ஜெகன், 33, ஆகியோருடன், கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த நான்கு பேர், பாபுவிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்-டனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டினர். கும்பலை தடுத்த பாபுவின் தந்தை மணி, மேனேஜர் சுரேஷ், ஜெகனும் கத்-தியால் வெட்டப்பட்டனர். நான்கு பேரும் அரக்கோணம் அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்படி அரக்கோணம் டவுன் போலீசார், கத்தியால் வெட்டிய ஆசாமிகளை தேடி வருகின்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us