/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ கணவன் இறந்த அதிர்ச்சி மனைவி விபரீத முடிவு கணவன் இறந்த அதிர்ச்சி மனைவி விபரீத முடிவு
கணவன் இறந்த அதிர்ச்சி மனைவி விபரீத முடிவு
கணவன் இறந்த அதிர்ச்சி மனைவி விபரீத முடிவு
கணவன் இறந்த அதிர்ச்சி மனைவி விபரீத முடிவு
ADDED : மே 18, 2025 04:43 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த மருதாலும் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 38. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்பக்கமுள்ள கழிப்பறைக்கு சென்றார்.
அப்போது மின் எர்த் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், காலை உயிரிழந்தார்.
கணவன் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவி திவ்யா, 33, மகன் திராவிட், 8, மகள் மித்ரா, 5, ஆகியோருக்கு பூச்சி கொல்லி மருந்தை குடிக்க கொடுத்து விட்டு, அவரும் குடித்துள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் கிடந்த அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.