Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ADDED : ஜூன் 14, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சில நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் சூறாவளி வீசுகிறது. இந்நிலையில் நேற்று காலை திடீரென ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் இருந்து 200 மீ.,க்கு கடல்நீர் உள்வாங்கியது. இதனால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டின. மதியம் 2:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், துறைமுகம் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதன்பின் தரையில் சிக்கி இருந்த படகுகளை மீனவர்கள் மீட்டு மீண்டும் இயக்கினர். இந்த பருவ சீசனில் கடல் உள்வாங்குவதும் சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us