Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

ADDED : ஜூலை 02, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன்கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை, வழிபாடு, அன்னதானம் நடந்தது.

ராமநாதபுரம் முகவை ஊருணி வடக்கு கரையில் உள்ளபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு காலையில் பால்,தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து தீபாராதனைநடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

இதுபோன்று ராமநாதபுரம்வழிவிடு முருகன் கோயில்,குமரய்யா கோயில், வெளிப்பட்டணம்பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில் மற்றும்ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர்கோயில், நீச்சல்குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்ஆகிய இடங்களில் நடைபெற சஷ்டி சிறப்பு அபிேஷகம் பூஜைகளில்பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகேநம்புதாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு, கந்த சஷ்டி கவசம் பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us