Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காவிரி குழாய் உடைப்பால் சேதமடைந்துள்ள ரோடு

காவிரி குழாய் உடைப்பால் சேதமடைந்துள்ள ரோடு

காவிரி குழாய் உடைப்பால் சேதமடைந்துள்ள ரோடு

காவிரி குழாய் உடைப்பால் சேதமடைந்துள்ள ரோடு

ADDED : செப் 16, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ராமநாதபுரம் ரோடு சுடலைமாடன் சுவாமி கோயில் அருகே செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதோடு தார் ரோடும் சேதமடைந்துள்ளது.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் ராமநாதபுரம் ரோடு சுடலைமாடன் சுவாமி கோயில் அருகே செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. எந்த பயன்பாடின்றி வீணாகி கழிவுநீரில் கலக்கிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் குழாய் உடைப்பால் தார் ரோடும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் இதே போன்று அடிக்கடி நடப்பதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us