Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒரு ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை ஊராட்சி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் அவதி

ஒரு ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை ஊராட்சி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் அவதி

ஒரு ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை ஊராட்சி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் அவதி

ஒரு ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை ஊராட்சி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் அவதி

ADDED : செப் 20, 2025 11:29 PM


Google News
திருவாடானை: ஒரு ஆண்டாக ஊராட்சிகளில் பணியாற்றும் கம்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 15 வது நிதிக் குழு மானியத்திட்டத்தில் மாதம் ரூ.7500 சம்பளத்தில் கம்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் இ-சேவை துவங்கப்பட்ட நிலையில் அந்தப் பணிகளையும், வரி வசூல், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் ஆகியவற்றை இவர்கள் கவனிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.

ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்தனர். அதில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் ஓராண்டாக சம்பளம் வழங்காததால் கவலையில் உள்ளனர்.

இது குறித்து சில கம்யூட்டர் ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:

ஓராண்டாக சம்பளம் வழங்காததால் பெரும் சிரமமாக உள்ளது. நிறைய பேர் பணியிலிருந்து விலகி விட்டனர். குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் பணியாற்றி வருகிறோம். அதிகாரிகளிடத்தில் முறையிட்டுள்ளோம். அரசு தலையிட்டு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பல ஊராட்சிகளில் கம்யூட்டர் ஆப்பரேட்டர்கள் பணியிலிருந்து விலகி விட்டதால் அந்த ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகின்றனர். இதனால் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக சில ஊராட்சி செயலர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us