ADDED : செப் 20, 2025 11:29 PM
பரமக்குடி: பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நான் முதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை பெறவும் திட்டம் வழிவகுக்கிறது. கல்லுாரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் வனஜா தலைமை வகித்தார். திட்ட பயிற்சியாளர் முத்துலட்சுமி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சூரிய பிரகாஷ் நாராயணன் திட்டம் குறித்து விளக்கினார். பேராசிரியர் மாலா நன்றி கூறினார்.