/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நடுவழியில் பஞ்சரான அரசு டவுன் பஸ்: பயணிகள் அவதி நடுவழியில் பஞ்சரான அரசு டவுன் பஸ்: பயணிகள் அவதி
நடுவழியில் பஞ்சரான அரசு டவுன் பஸ்: பயணிகள் அவதி
நடுவழியில் பஞ்சரான அரசு டவுன் பஸ்: பயணிகள் அவதி
நடுவழியில் பஞ்சரான அரசு டவுன் பஸ்: பயணிகள் அவதி
ADDED : செப் 15, 2025 06:07 AM

முதுகுளத்துார்,: -சாயல்குடியில் இருந்து முதுகுளத்துார் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கீழச்சாக்குளம் அருகே பஞ்சர் ஆனதால் பாதி வழியில் பயணிகள் சிரமப் பட்டனர்.
முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடிக்கு அரசு டவுன் பஸ் எண் 9 நம்பர் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று சாயல்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு காலை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கீழச்சாக்குளம் அருகே பஞ்சர் ஆனது.
பயணம் செய்த பயணிகள், பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதையடுத்து மக்கள் அவ்வழியே வரும் டூவீலர் மற்றும் வாகனங்களை மறைத்து லிப்ட் கேட்டு சென்றனர்.
இதனால் 2 கி.மீ., துாரம் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் அவதிப்பட்டனர். அரசு பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படும்போது முழுமையாக பரிசோதனை செய்து இயக்க வேண்டும்.மேலும் பழுதான டவுன் பஸ்சைகளை பஸ் பணிமனையில் ஒப் படைத்து விட்டு புதிய பஸ்கள் பெறுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.