ADDED : மார் 23, 2025 04:53 AM
திருவாடானை : திருவாடானை அருகே கோடனுாரை சேர்ந்தவர் மகாலிங்கம் 47.
நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு கை, கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கினர். மகாலிங்கத்தை காணாமல் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் கண்மாய் நீரில் மகாலிங்கம் தலையில் அணிந்திருந்த தொப்பி மிதந்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மகாலிங்கம் உடலை மீட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.