Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாலிபர்  கொலையில் மேலும் ஒருவர் கைது

வாலிபர்  கொலையில் மேலும் ஒருவர் கைது

வாலிபர்  கொலையில் மேலும் ஒருவர் கைது

வாலிபர்  கொலையில் மேலும் ஒருவர் கைது

ADDED : மே 21, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்த செய்யது அப்துல்லா 31, வாங்கிய கடனை திருப்பி தாராததால் கடன் கொடுத்தவர்கள் அவரை அடித்துக்கொலை செய்து தினைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் வீசிச் சென்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கான்சாகிப் தெருவை சேர்ந்த கமால் முஸ்தாபா மகன் செய்யது அப்துல்லா 31. இவர் ராமநாதபுரத்தில் அலைபேசி மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார்.

இவர் ஆன்லைன் வர்த்தக மேம்பாட்டிற்காக கடன் பெற்றிருந்தார்.

இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவரை கடத்திச் சென்ற கடன் கொடுத்தவர்கள் செய்யது அப்துல்லாவை அடித்துக்கொலை செய்து தினைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் வீசிச் சென்றனர்.

திருப்புல்லாணி போலீசார் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த ராஜா உசேன் மகன் முகமது அனஸ் 32, வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த சீனி அப்துல்காதர் மகன் முகமது ஷாரூக்கான் 26, வடக்குத்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவபிரசாத் 27, ஆகிய மூவரை கைது செய்து விசாரித்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பலரை தேடி வந்தனர். இந்நிலையில் அழகன்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த லியாகத் அலி 68, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவர்கள் நான்கு பேரும் ராமநாதபுரம் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர் பொறுப்பு மாஜிஸ்திரேட் அய்யப்பன் ஜூன் 4 வரை நான்கு பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us