ADDED : மார் 12, 2025 01:12 AM
திருவாடானை; திருவாடானை நீதிமன்றத்தில் மகளிர் தினவிழா நடந்தது. நீதிபதி மனிஷ்குமார் தலைமை வகித்தார். நீதிபதி ஆண்டனி ரிசார்ட்சேவ், வக்கீல் சங்க தலைவர் ரமேஷ், அலுவலர்கள் கலந்து கொண்டனர். வக்கீல் சங்கம் சார்பில் கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
வக்கீல்கள் சிவராமன், கண்ணன், தனபால், கணேசபிரபு, கலா, பாக்கிலட்சுமி பங்கேற்றனர். ஏற்பாடுகளை வக்கீல் சங்க செயலாளர் சசிகுமார், பொருளாளர் வேலாயுதம் செய்திருந்தனர்.