Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தண்ணீர் குழாய் பதிப்பதில் தாக்குதல்:11 பேர் மீது வழக்கு

தண்ணீர் குழாய் பதிப்பதில் தாக்குதல்:11 பேர் மீது வழக்கு

தண்ணீர் குழாய் பதிப்பதில் தாக்குதல்:11 பேர் மீது வழக்கு

தண்ணீர் குழாய் பதிப்பதில் தாக்குதல்:11 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 20, 2024 04:28 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வ.பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் வசந்த ராஜேஷ் 27. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி 31, குடும்பத்தினருக்கும் இடையே தண்ணீர் குழாய் பதிப்பதில் முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து பாலாஜி புகாரில், அப்பகுதியைச் சேர்ந்த வசந்த ராஜேஷ், அபி, சுபாஷ் சுரேந்திரன் உட்பட ஆறு பேர் மீதும், வசந்த ராஜேஷ் புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி, சரவணன், லதா உட்பட ஐந்து பேர் மீதும் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., பூமிநாதன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us