ADDED : ஜூலை 25, 2024 11:56 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஜார் போலீசார் மதுரை ரோடு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்றிருந்த திடீர் நகர் முருகன் மகன் பாம்பு நாகராஜன் 22, பெரியார்நகர் பாண்டி மகன் அருள்குமார் 24, ஆகியோரை சோதனையிட்டனர். இதில் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.