/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி காணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி காணிக்கை
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி காணிக்கை
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி காணிக்கை
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி காணிக்கை
ADDED : ஜூலை 25, 2024 11:56 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய ரூ.1.09 கோடி காணிக்கையாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று கோயிலில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் ஊழியர்கள் திறந்து காணிக்கைகளை சேகரித்தனர்.
பின் காணிக்கைகளை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 9 லட்சத்து 7 ஆயிரத்தி 89 ரூபாயும், தங்கம் 50 கிராம், வெள்ளி 2 கிலோ 400 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, சேலத்தைச் சேர்ந்த சிவனடியார் குழுவினர் பலர் பங்கேற்றனர்.