Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை; ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை; ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை; ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை; ஜூலை 31 வரை நீட்டிப்பு

ADDED : ஜூலை 25, 2024 11:55 PM


Google News
ராமநாதபுரம் : அரசு ஐ.டி.ஐ.,க்களில் 2024-25ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி மற்றும் இ-மெயில் முகவரியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 31க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு பரமக்குடி- 04564 -231 303, ராமநாதபுரம் - 04567 -- 231 214, முதுகுளத்துார்- 04576 - -222 114, கடலாடி - 94438 61656 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us