Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாண்டிற்குள்  தடையை மீறி நிறுத்தப்படும் டூவீலர்களால் அவதி

பஸ் ஸ்டாண்டிற்குள்  தடையை மீறி நிறுத்தப்படும் டூவீலர்களால் அவதி

பஸ் ஸ்டாண்டிற்குள்  தடையை மீறி நிறுத்தப்படும் டூவீலர்களால் அவதி

பஸ் ஸ்டாண்டிற்குள்  தடையை மீறி நிறுத்தப்படும் டூவீலர்களால் அவதி

ADDED : ஜூலை 18, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வாகனங்கள் நிறுத்த தடை விதித்த போதும் அதனை மீறி டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்தற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணியால் ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து உள்ளூர், வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

போதிய இடவசதியின்றி நெருக்கடியாக உள்ளதால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் டூவீலர்களை நிறுத்த போலீசார் தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இதனை மதிக்காமல் தடையை மீறி டூவீலர்களை நிறுத்துவதால் பஸ் போக்குவரத்தற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

எனவே தடையை மீறும் வாகனங்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us