Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

ADDED : ஜூன் 10, 2024 05:48 AM


Google News
திருவாடானை, : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டப்பட்டு தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தற்போது ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இதனால் திருவாடானை எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையின் சாவியை சம்பந்தப்பட்டவர்களிடம் தாசில்தார் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us