ADDED : ஜூன் 22, 2024 04:53 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அம்மனுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.