ADDED : ஜூலை 25, 2024 04:08 AM

பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் பெருமாளுக்கு திருவோணம் நட்சத்திரத்தில் அபிஷேகம் நடந்தது.
இங்குள்ள பெருமாளுக்கு நேற்று முன்தினம் மாலை அபிஷேகம் நடந்தது. பின்னர் துளசி மாலை சாற்றி ஆபரணங்களுடன் அருள் பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.