ADDED : ஜூலை 26, 2024 01:08 AM
பெரம்பலுார்:குரும்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், நிலுவையில் உள்ள, 7 மாத சம்பளத்தை வழங்கக் கோரி, கடந்த நான்கு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று, துறையூர் - பெரம்பலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களை வகுப்புக்கு அனுப்பினர்.