/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோடைக்கு முன்னதாக பூத்த 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள்கோடைக்கு முன்னதாக பூத்த 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள்
கோடைக்கு முன்னதாக பூத்த 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள்
கோடைக்கு முன்னதாக பூத்த 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள்
கோடைக்கு முன்னதாக பூத்த 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள்
ADDED : ஜன 02, 2024 09:03 PM

கூடலுார்:முதுமலை, மசினகுடியில் முன்னதாகவே 'பிளேம் ஆப் பாரஸ்ட்' மலர்கள் பூத்துள்ளதால், கோடைக்கு முன்னதாகவே வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கூடலுார் முதுமலை பகுதிகளில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்தது. தொடர்ந்து, தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் புற்கள் தாவரங்கள் பசுமை இழந்து வருகிறது. இந்நிலையில், வறட்சியை வரவேற்கும் வகையில், கோடைக்கு முன்னதாகவே 'பிளேம் ஆப் பாரஸ்ட்' பூக்கள் மலர்ந்துள்ளன. இதனால் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த பூக்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தீ ஜுவாலை எரிவது போன்ற காட்சி தருவதால், 'பிளேம் ஆப் பாரஸ்ட்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவைகள் கோடைக்கு முன்னதாக பூத்துள்ளதால் வறட்சியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வறட்சியை தவிர்க்க, கோடை மலையை எதிர்பார்த்து உள்ளோம்,' என்றனர்.