/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்
பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்
பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்
பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

கால்வாய் மூடப்பட்டதால் பாதிப்பு
இந்நிலையில், நெலாக்கோட்டை அருகே கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையின் கீழ் பகுதியில் கூவச்சோலை கிராம குடியிருப்புகள் அமைந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மழை நீர் வழிந்து ஓட ஏதுவாக சாலையின் குறுக்கே இங்கு அமைக்கப்பட்டிருந்த, கால்வாய்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மூடப்பட்டது. இதனால், மழை வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் சாலையை ஒட்டிய விரிசலான பகுதிகளில் புகுந்து மண் சரிவை ஏற்படுத்தி உள்ளது.
வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அதில், நான்கு வீடுகள் முன் மற்றும் பின் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்குகிறது. சில வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது விழும் என்று தெரியாமல் உள்ளது.
மாணவர்கள் பாதிப்பு
---இதனால், இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்ல முடியாததுடன், மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் முதலில் மழை நீர் வழிந்தோட ஏற்கனவே இருந்த கால்வாய்களை மீண்டும் சுத்திகரிப்பு செய்து திறந்து, தண்ணீர் கீழ்நோக்கி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். மாறாக மண் சரிவு ஏற்படுவதாக கூறி, எங்களை வேறு பகுதிக்கு இடம்பெற கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, இப்பகுதியில் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.