/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைவுநீலகிரியில் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைவு
நீலகிரியில் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைவு
நீலகிரியில் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைவு
நீலகிரியில் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைவு
ADDED : ஜன 05, 2024 11:37 PM
ஊட்டி;'நீலகிரியில் கடந்த ஆண்டு, 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ். பி., சுந்தரவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள், 19 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளன. பாலியல் குற்றத்தை குறைக்கும் வகையில், 3,020 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 12 பாலியல் குற்ற வழக்குகளுக்கு கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டது.
உடல் சார்ந்த குற்றங்கள், 46 சதவீத வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. மேலும், 1,528 குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு; 1712 அதிவேகமாக வாகனம் இயக்கிய வழக்கு; 349 அபாயகரமாக வாகனம் இயக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1
ஓராண்டில், 9 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. நகரில், 100 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைந்திருப்பதுடன், 97 சதவீதம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளை இடையூறின்றி செய்ய போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.