Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகம் : உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகம் : உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகம் : உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகம் : உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 16, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
பந்தலுார;'மாவட்டத்தில் அனுமதியின்றியும், முறைகேடாகவும் செயல்படும் மனநல காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில், 'லவ்ஷேர்' என்ற பெயரில் மனநல காப்பகம் ஒன்று கடந்த, 1999ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அது குறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவர்கள் குறித்த எந்த விபரங்களும் பதிவு செய்யாமல், காப்பகம் அருகே இடம்வாங்கி அதனை தனி மயானமாக மாற்றி அங்கு அடக்கம் செய்து வந்துள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் கடந்த, 9-ம் தேதி கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையில் நடத்திய ஆய்வுக்கு பின், காப்பகத்தை சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த, 15 பேரை மீட்டனர். தேவாலா டி.எஸ்.பி.,சரவணன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மனநல காப்பகம் நடந்து வந்த பகுதி மற்றும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதிகளை, பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர் சிபி, பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், நளினி, மாவட்ட பொருளாளர் தர்மன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் உட்பட பல நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.

மோகன்ராஜ் கூறுகையில், ''கடந்த, 25 ஆண்டுகளாக எந்த அனுமதியும் இன்றி இந்த காப்பகம் செயல்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பகத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கு தனியாக ஒரு மயானம் உருவாக்கி உள்ளது குறித்தும், தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனுமதியின்றியும், முறைகேடாவும் செயல்படும் மனநல காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்; எஸ்.பி., ஆகியோரை நேரடியாக சந்தித்து பேச உள்ளோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us