ADDED : மே 20, 2025 07:31 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தார்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 63; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, பூலக்காட்டூர் என்ற பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த டூவீலர், இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, இரவு செல்லப்பன் உயிரிழந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.