/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.18.13 லட்சத்தில் நலத்திட்டம்மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.18.13 லட்சத்தில் நலத்திட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.18.13 லட்சத்தில் நலத்திட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.18.13 லட்சத்தில் நலத்திட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.18.13 லட்சத்தில் நலத்திட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
நாமக்கல்: மக்கள் குறைதீர் கூட்டத்தில், 64 பயனாளிகளுக்கு, 18.13 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 655 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், இணை மானிய திட்டத்தின் கீழ், 4 பேருக்கு, 5.44 லட்சம் ரூபாய் மானியத்தில், 18.10 லட்சம் ரூபாய் தொழில் கடன் உதவி வழங்கப்பட்டது.
மேலும், 17 பேருக்கு, பள்ளி சீருடை தையல் பயிற்சி சான்றிதழ், 21 பேருக்கு, தொழிலாளர் நல வாரிய பதிவு அட்டை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, இலவசமாக மனுக்கள் எழுதி தரும் யூத் ரெட்கிராஸ் தன்னார்வலர்கள், 19 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பேருக்கு தாங்குகட்டை, காதொலி கருவி, மருத்துவ காப்பீட்டு அட்டை, நலத்திட்ட உதவிகள் என, மொத்தம், 64 பயனாளிகளுக்கு, 18.13 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.