Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

ADDED : ஜூன் 28, 2025 07:58 AM


Google News
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, தில்லைநகர் பகுதியில் கடந்த, 15 நாட்களாக ஆற்று தண்ணீர் வரவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: பள்ளிப்பாளையம், தில்லைநகர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன.

நகராட்சி சார்பில் காவிரி ஆற்று தண்ணீர், தினமும் ஒரு மணி நேரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, புதிய குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் புதிய குடிநீர் திட்டத்தில் கடந்த, 15 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்று தண்ணீர் வினியோகம் இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மீண்டும் பழைய குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us