Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பிளாஸ்டிக் குழாய் திருடிய பஞ்., துணைத்தலைவர் கைது

பிளாஸ்டிக் குழாய் திருடிய பஞ்., துணைத்தலைவர் கைது

பிளாஸ்டிக் குழாய் திருடிய பஞ்., துணைத்தலைவர் கைது

பிளாஸ்டிக் குழாய் திருடிய பஞ்., துணைத்தலைவர் கைது

ADDED : ஜன 08, 2024 11:52 AM


Google News
எலச்சிபாளையம்: மல்லசமுத்திரம் யூனியன், வேலணம்பாளையம் பகுதியில், பூலாம்பட்டி காவிரி குடிநீர் இணைப்பு திட்டப்பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆங்காங்கே பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், 6:00 மணிக்கு, இந்த திட்டத்தின் கான்ட்ராக்டர் கோவிந்தராஜன், வேலணம்பாளையம் வழியாக சென்றுள்ளார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளரும், பருத்திப்பள்ளி பஞ்சாயத்து துணைத்தலைவருமான சுந்தரராஜன், 36, டெம்போ டிரைவர் நந்தகுமார், 27, ஆகிய இருவரும், பிளாஸ்டிக் குழாய்களை திருடி, டெம்போவில் ஏற்றியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கான்ட்ராக்டர் கோவிந்தராஜன், எலச்சிபாளையம் போலீசில் புகாரளித்தார்.

அவர்கள் நடத்திய விசாரணையில், சுந்தரராஜன் வீட்டில் ஏற்கனவே மூன்று பிளாஸ்டிக் குழாய்கள் திருடி சென்று வைத்துள்ளதும், நான்காவதாக ஒரு குழாய் திருடும்போது கையும், களவுமாக மாட்டிக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, சுந்தரராஜன், நந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். பஞ்., துணைத்தலைவரே, குழாய்களை திருடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us