/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு
சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு
சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு
சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு
ADDED : செப் 17, 2025 01:50 AM
ப.வேலுார் :பரமத்தி அருகே, வெள்ளாளபாளையத்தில் சர்வீஸ் சாலை அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மற்றோரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேம்பால பணியால் வாகனங்கள் செல்ல வசதியாக, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரமத்தி அருகே, வெள்ளாளபாளையம் கிராமத்தில் சர்வீஸ் ரோடு மற்றும் மழைநீர் செல்ல சாக்கடை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டியே மற்றொரு சர்வீஸ் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதையேற்று, பரமத்தி அருகே உள்ள ராசாம்பாளையம் டோல் பிளாசா கண்காணிப்பாளர் சிவகாமசுந்தரம், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், 'ஏற்கனவே சர்வேயர் மூலம் அளவீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டும் தான் ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும்; தேவையின்றி வீட்டின் முன் இருக்கும் மண் திட்டுகளை அகற்றினால் பள்ளம் ஏற்படும்; அதனால் நாங்கள் வீட்டுக்குள் செல்ல சிரமம் ஏற்படும்' எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பணியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு தரப்பினர் கூறியபடி, 'ஏற்கனவே அளவீடு செய்த இடத்தில் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, கூறியதை அடுத்து சமாதானமடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.