Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை காளான் வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை காளான் வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை காளான் வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை காளான் வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி

ADDED : செப் 17, 2025 01:50 AM


Google News
நாமக்கல் :'காளான் வளர்ப்பு தொழில் நுட்பம்' என்ற தலைப்பில், நாளை ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, 'காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், லாபம் தரும் காளான் வளர்ப்பு முறைகள், விதை உற்பத்தி, காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும்போது ஏற்படும் இடர்பாடுகளும், தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை முறை குறித்து விளக்கப்படுகிறது.

அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர்கள், விவசாய ஊரக இளைஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத மாணவ, மாணவியர், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286--266345, 266650, 9943008802, 9597746373 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us